அறிமுகம்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துவக்க கூட்டம் 14.08.2007 அன்று மதுரை வில்லா புரத்தில் உள்ள வீராங்கனை லீலாவதி அரங்கத்தில் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்பது தலித் இயக்கங்கள், தொழிற்சங்கங்கள், வெகுசன அமைப்புகள், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட இயக்கங்களின் கூட்டு மேடையாக உருப்பெற்றது. இம் முன்னணியில் இணைந்துள்ள இயக்கங்கள் எல்லாம் சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஏற்கனவே போராடி வந்துள்ள அமைப்புகள் தான் என்றாலும் இவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடு மேலும் வீச்சோடும் வீரியத்தோடும் அமையும் என்பதே இதில் உருவாக்கத்திற்கான காரணமாகும்.

இதன் பெயரில் உள்ள “தீண்டாமை ஒழிப்பு” என்பது உடனடி கடமையை சுட்டிக் காட்டுவதே அல்லாது அதன் இலக்கு “சாதி ஒழிப்பு” என்பதே.

இத்தகைய புரிதலோடும் லட்சியத்தோடும் உருவாக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் மாநில மாவட்ட மட்டங்களில் சாதி பாகுபாடுகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களம் கண்டு வரும் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து கைகோர்த்துள்ளன.மேலும் …

தகவல் பலகை (1091) :

கலையும் இலக்கியமும் பளிச் என்று ஒரு கண்ணாடி போல் சமூகத்திற்கு எதிரே அதன் முகத்தைக் காட்டும். தகழி சிவசங்கரன் பிள்ளையின் தோட்டியின் மகன் நாவல் படித்துப் பல நாள் உறக்கமிழந்தவர்கள் உண்டு. இந்திய முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான முல்க் ராஜ் ஆனந்தின் ‘தீண்டத்தகாதவன்’ பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இமையத்தின் ‘பெத்தவன்’ கதை, திவ்யா இளவரசன் நிஜ வாழ்க்கையில் நேர்ந்த செய்தி களைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். ‘இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கம் இட்டு இருக்குதோ’ என்று சாதியத்தை சவுக்கால் அடித்த சித்தர்...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist